Tuesday 22 March 2016


மருது பாண்டியர் வரலாறு - ஆங்கிலேயர்கள் குறிப்பில் இருந்து -
மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.
புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.
உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.
2
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்கிறார்,
தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”
தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.
மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
3
ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”
மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:
Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.
ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.
4
கோர்லே கூறுகிறார்:
“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”
மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.
1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.
“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.
மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’
மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”
எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.
கோர்லே கூறுகிறார்:
நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”
5
இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.
இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.
இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
6
இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.
இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்
அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.
1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த விதவைகள் யார்?
முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.
இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.
தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.
மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,
கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London
2. Military Reminiscences - James Welsh 1830 London
3. The Examiner 1813 Collection – Leigh Hunt
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

மருது பாண்டியர் வரலாறு


சகோதரர்கள் ஆவர். இவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய சுதந்திரப்
போராட்ட வீரர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
பெரியமருது பாண்டியர் 1748-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தற்போதுள்ள
விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற
கிராமத்தைச் சேர்ந்த உடையார் தேவர்  என்ற மொக்க பழநியப்பன் தேவர்  – ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753-ம் சின்ன மருது பாண்டியர் பிறந்தார்.
இவர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்றும்
அழைக்கப்பட்டார். அவரை விட சின்ன மருது உயரத்தில் சிறியவராக இருந்ததால்
இளைய மருது என்றும் சின்ன மருது பாண்டியர் என்றும்  அழைக்கப்பட்டார்.

அரச சேவை :-
சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

இவர்கள் இருவரும் சிவகங்கை அரசர் முத்து வடுகநாத தேவரின் போர்ப்படையில் வீரர்களாக சேர்ந்து தங்கள் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை
கண்டு மெச்சிய முத்து வடுகநாத தேவர் மருது சகோதரர்களை தன் படையின்
முக்கிய பொறுப்புகளில் அமர்த்தினார்.
கர்னல் வெல்ஷ் என்ற ஆங்கில ராணுவ அதிகாரி தனது “இராணுவ நினைவுகள்” நூலில்
மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும்
தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும்
சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர்
ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர்.
ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில்
நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது
சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர்
அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும்
உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்” என்று கர்னல் வெல்ஷ் கூறுகிறார்.
தனக்கு வேல் பிடிக்கவும், களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன
மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர்
வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து
சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும்
மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின்
கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால்
தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து.
பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க
அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை
விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு
என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத்
தளர்த்தும் வாய்ப்பு – எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு – கிடைத்தது.
அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத்
தப்பவைக்க முடியவில்லை.”
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள்
கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில்
சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.
ஆற்காடு நவாப் தமிழகத்தில் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக
ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் அடிப்படையில் 1772-ம் ஆண்டு  ஜோசப்
ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது.
அப்போது தாக்குதலை எதிர்பாராமல் இருந்த மன்னர் முத்து வடுகநாத தேவர்
காளையார் கோவில் போரில் பலியானார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார்,
மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருது சகோதரர்கள்
திண்டுக்கல் அருகே விருப்பாச்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
1772-ம் ஆண்டுக்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள்
தமது கிளர்ச்சியை  தொடங்கினார்கள். அவர்கள் 1780-ம் ஆண்டு ஆற்காட்டு
நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டனர்.
அவர்கள் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில்
அமர்த்தினர்.
இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை
பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு
போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்தஹைதர்
அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில்
அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக்
குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச்
சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள்
காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டினர். குன்றக்குடி, திருமோகூர்
கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.
இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார்.
அவர் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத்
துவக்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டார்.
1801-ம் ஆண்டு ஜுன் 12-ம் தேதி சின்ன மருது திருச்சி, திருவரங்கம் முதலிய
இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என
அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப்
பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயர்க்கு எதிராகப்
போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுத்தது.
1801-ம் ஆண்டு மே 28-ம் தேதி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு
அடைக்கலம் கொடுத்த காரணத்தைக் கூறி ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர்
150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. இறுதியில் மருது பாண்டியர்கள்
தூக்கிலிடப்பட்டனர்.
1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி வெள்ளையர்கள், மருது பாண்டியர்களை
தூக்கிலிட்டபோது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும்
மேற்பட்டோரையும் தூக்கிலிட்டனர்.
மருது பாண்டியர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை
வழங்கியதோடு இறைபணியிலும் சிறப்பாக ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இந்து மத
கோவில்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கும் உதவி செய்ததை வரலாறு
கூறுகிறது. மருதுபாண்டியர் மேற்கொண்ட இறைபணிக்கு சில எடுத்துக் காட்டுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மருது சகோதரர்களின் கோயில் பணி
மருது சேர்வைகளின் நாட்டுப்  பணிகள் ஏராளம். மக்கள் பணியில் அவர்கள்
மிகச்சிறந்து விளங்கியதோடு இறை பக்தியிலும் எவரும் மிஞ்சமுடையாத அளவில்
இருந்தனர் நம் மருது பாண்டியர்கள். “மருது பாண்டியர்கள் சரணடையவில்லை
என்றால் காளையர் கோவிலை இடித்து விடுவோம்” என்று வெள்ளைக்காரர்கள்
எச்சரிக்கவே எம்முயிரை விடக் கோவில்களே முக்கியமென்று கருதி சரணடைந்து
தூக்குமேடை ஏறிய உத்தமர்களே மருது சேர்வைகளென்பது குறிப்பிடத் தக்கது.
அவர்கள் ஆற்றிய இறைப்பணிகளும் கட்டிய ஏராளம். அவற்றுள் குறிப்பிடத்
தக்கவை இவை.
அழயான் குளம் பிள்ளையார் கோவில்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6
கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு
பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால்
கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும்
குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய
கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச்
சிறப்பித்துள்ளனர்.
அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள்
கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக்
கோபுரம்தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள்
எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமையையும்
ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“கருமலையிலே கல்லெடுத்துக் காளையார் கோயில் உண்டு பண்ணி மதுரைக் கோபுரம் தெரியக்
கட்டிய மருதுவாரதைப் பாருங்கடி.”
அக்கோயிலின் வெளிப்புறத்தின் கிழக்குப் பகுதியின் பழைய வாயிலுக்கு
எதிரில் மருது சகோதரர்களின் சமாதிகள் உள்ளன. பழைய கோபுரத்தின் உள்ளே
கருங்கல்லால் வடிக்கப்பட்ட அவர்களின் இருவரின் திருவுருவம் கோயிலில்
வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27தேதிகளில்
அவர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
குன்றக்குடி கோயில்: குன்றக்குடி மலை மேல் கோபுரமும் மண்டபமும்
கட்டியுள்ளனர். அங்குள்ள மருதாபுரி என்னும் குளமும் மருது சகோதரர்கள்
வெட்டியதே ஆகும். அக்கோயிலில் அவர்களின் சிலைகள் பெரிய அளவில்
இருக்கின்றன. அக்கோயிலிலுள்ள முருகனுக்குச் சாத்தப்படும் பொற்கவசத்தில்
‘சின்னமருது உபயம்” என்னும் சொற்கள் காணப்படுகின்றன.
சருகணி மாதா கோயில்: சருகணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தைத் திறம்பட
நடத்துவதற்காக அச்சிற்றூரை மருது சகோதரர்கள் முழுமையாக அக்கோவிலுக்கு
தானமாக வழங்கினர். அங்கு நடைபெறும் தேரோட்டத்துக்குரிய செலவுகள்
அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போதும் திருவிழாக் காலங்களில்
மருது சகோதரர்களின் குடிவழியினருக்கு முதல் மரியாதை அளித்த பின்னரே
தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை திருஞான சுப்பிரமணியார் கோயில்:சிவகங்கையில் உள்ள திருஞான
சுப்பிரமணியார் கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயில்
கட்டப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது. சிவகங்கைப் பாளையத்தின் இரண்டாம்
அரசர் முத்துவடுகநாத தேவர் பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கு நெடுநாள்களாக
மகப்பேறு இல்லாதிருந்தது. அரசரின் கடைசிநாளில் ஒரு பெண் குழந்தை
பிறந்தது. பிள்ளைப் பேறுண்டானால் கோயில் ஒன்று கட்டுவதாக முத்துவடுகநாத
தேவர் இறைவனை வேண்டியிருந்தார்.
ஆனால் எதிர்பாராமல் 25-6-1772 அன்று நடந்த போரில் அவர் இறந்துவிடவே
கோயில் கட்ட இயலாமல் போய்விட்டது. அரசரின் அவ்வேண்டுதலை அறிந்தமருது
சகோதரர்கள் அக்கோயிலைக் கட்டி முடித்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கோயிலின்
முன்மண்டபத்தில் இடப்புறம் உள்ள முதல் தூணில் இச்செய்தியை
உறுதிப்படுத்துவதற்குரிய கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
திருமோகூர் கோயில்: திருமோகூர் என்ற வளர் மதுரையில் இருந்து திருச்சி
செல்லும் ரோட்டில் ஒத்தக்கடை என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லவும்
ரோட்டில் 3 கல் தொலைவில் உள்ளது. அங்கு காளமேகப் பெருமானுக்கு இரண்டு
கோயில்கள் இருக்கின்றன. அக்கோயிலின் முகப்பு முன் உள்ள மண்டபம் மருது
சகோதரர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அக்கோயில் முன்பு மருது சகோதரர்களின் சிலைகள் இருக்கின்றன. மருது சிலைகள்
மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகுடன் உள்ளது.
ஆனால் தூசு படிந்து யாரும் பராமரிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலில் பூசை
செய்வதற்காக மாங்குடி, மானாகுடி ஆகிய சிற்றூர்களை தானமாகக் கொடுத்ததாகத்
தெரிகிறது.
நரிக்குடி கோயில்: மருது சகோதரர்கள் தம் சொந்த ஊரான நரிக்குடியில் இரண்டு
கோயில்களைக் கட்டினர். ஒன்று அன்னதான மருகி விநாயகர் கோயில், இன்னொன்று
அழகிய மீனாம்பிகை கோயில். பாண்டியன் கிணறு என்னும் பெயரில் ஒரு
கிணற்றையும் வெட்டி உள்ளனர்.
வீரக்குடி கோயில்: வீரக்குடியில் உள்ள முருகன் கோயிலில் முன்புறத்தில்
பெரிய மருதுவின் சிலை ஒன்று உள்ளது. எனவே அக்கோயிலைப் பெரிய மருது
கட்டியதாகச் சொல்கிறார்கள்.
திருக்கோட்டியூர் கோயில்: மருது சகோதரர்கள் திருக்கோட்டியூரில் உள்ள
தலத்தையும் குளத்தையும் புதுப்பித்து இறைவனுக்கு தேர்
ஒன்றினையும்செய்தளித்துள்ளனர்.
திருப்பத்தூர் கோயில்: திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில் மருது
சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயிலில் திருத்தலைநாதர்,
சிவகாமியம்மன் திருவுருவங்கள் உள்ளன. அக்கோயிலுக்கு உள்ளே வைரவன் கோவில்
உள்ளது. அக்கோயில் மண்டபத்தில் பெரிய மருது, சின்ன மருது சிலைகள் உள்ளன.
அக்கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் குன்றக்குடி
ஆதினத்திற்கு சொந்தமானது.

The Mukkulathor (or) Thevar people 


 The Thevar people (Thevar literally means "celestial beings divine natured-people")[१] collectively forms the Mukkulathor मुक्कलदोर (meaning: people of the three clans). Mukkulathors are a group of Tamil aristocratic warrior/martial people,[२] native to the Southern districts of Tamil Nadu. The Mukkulathors descended from the three royal lineage namely Cholas, Pandyans and Cheras.[१][३][४][५] The name "Mukkulathor" alludes to the three roughly designated groups, Kallar, Maravar and Agamudaiyar, which make up this large endogamous social group. Kallar and Maravar were inhabitants of Palai region during the Sangam period [६]. The literature during sangam period divided the regions based upon the climate and topography. Palai was mainly a desert like region with little to no rain. Nowadays, Mukkulathors are found all over the southern and central districts of Tamil Nadu, North-east Sri Lanka and amongst Tamil expatriate communities in South-East Asia and America. There is also a small community in Chattisgarh where they had migrated during British rule. The Royal houses of Sivagangai, Ramnad and Pudukkottai belongs to the Mukkulathor community. अनुक्रमणिका १ Kallar २ Maravar ३ Agamudayar ४ Surnames and Titles ५ Recent Scientific study ६ Freedom Fighters ७ Religion ८ Feudal/Caste System ९ Inscriptions ९.१ Current Status १० See also ११ References १२ List of prominent Mukkulathors १३ बाह्य दुवे Kallar See main article Kallar Kallar कळ्ळर (Tamil: கள்ளர்) Meaning Brave Peoples Kallars are one of the three related castes which constitute the Mukkulathor confederacy. They are described as "A fearless community shows many signs of independence and non-submission to any form of subjugation". Historians postulate the word Kallar Derived from Kalla means Black in Sanscrit and Tamil (கள்வனென் கிளவி கரியோனென்ப' - திவாகரம்) Historians postulate Dravidians were called by Aryans as Kalla .[७]. Thirumal is also stated Mal to meant he is Black and also Krishna means Black.[८] In olden days Black Dravidians were stated as Kalla to state their Bravery. Kallars are largely found in the Southern districts of Thanjavur, Madurai, Pudukkottai, Trichy, Ariyalur, Theni, Dindigul, Sivaganga,Virudhunagar, Tirunelveli, Thiruvarur, Nagapattinam and Ramanathapuram districts of Tamil Nadu. They are also present in Karur, Kanchipuram, Perambalur and Villupuram districts. One of their popular deities is Kallazhagar who is a warrior incarnation of "Lord Thirumala or Venkadavan". The "Pandi Temples" (Muni Koil) found in Madurai and Southern regions of Tamilnadu were originally the Tombs of the Early Tamil Pandya Kings and Rulers. Pandiyar Kudavarai which is found in Aritapatti (near Melur) has been built for the Siddhars by the Early Pandya Kings. The Kallars are quintessentially a feudal society, with feudal classes such as the Ambalakarar. They are found mainly in the Madurai, Tirchuripalli, Ariyalur and Sivaganga districts. In these districts, each village is headed by an "Ambalam" (president of an assembly) and the Ambalam took upon themselves the power to adjudicate disputes that arose among the inhabitants in the Nadu. The term "Nadu" is an ancient political and administrative system found wherever Kallar populations migrated. Thenpandi Singam by M. Karunanidhi is a book about Ambalakarars and it was also made into a Television serial broadcasted over Sun TV Network and music composed by Ilaiyaraaja.[९] They used to hear complaints, hold inquiries and punish the offenders. They wielded considerable powers to intervene in any kind of transaction or transfer of property among the people. No land could be alienated from one man to another without the permission of the Ambalams. The sur-name "Ambalam"is given to them, because of their Administration in their Villages. So they are mostly called as "Ambalam". Another important Kallar subcaste is the Piramalai Kallar. They are a highly traditional people and have preserved their ancient customs to the present day. They are also believed to be the oldest inhabitants of the Tamil country with reports of their presence going back to Tamil literary works of the 4th century B.C. They are found mainly in the districts of Madurai(Usilampatti), Dindigul and Theni. Their popular deity is Amman, the Mother Goddess. They have contributed enormously in the freedom struggle for India. Perungaamanallur people near Usilampatti, fought against the british and many have died and they have a Thiyagigal Thoon (Pillar of freedom fighters) built in memory of them. Piramalai Kallars have also made big contribution in Nethaji's INA force when Subash chandra bose made a call for the INA force from the submarine radio lots of people from the community went and joint to fight against the british for India. They are kept alive of our ancient culture. Some of the other feudal classes include Koothappar Kallars, Periyasuriyur Kallars, Gandarvakoatai Kallars and Esanattu Kallars found largely dominated in the Thanjavur, Pudukkottai, Sivagangai & Trichy Districts. Significant Kallar population also found in Srilanka and Malaysia. Samy Vellu, Ex-Works Minister (lost in 2008 election) and Leader of Malaysian Indian Congress, S. Thondaman, Leader of Indian Tamils of Sri Lanka are notable persons outside Tamilnadu. Vandiyar Paluvettaraiyar(பழுவேட்டரையன்) Malayaman(மலையமான்) Vallavaraiyar(வல்லவரையன்) Muniaraiyar Nilakkilar Kaliyaraiyar Puvaraiyar Velar(வேளார்) Vanataraiyar Thondaiman(தொண்டைமான்) Maravar See also main article Maravar Maravar (साचा:Lang-ta) also "Maravan" (meaning "Grateful Warrior") are one of the oldest social groups to be mentioned by the Sangam Tamil literature[१०]. This indicates an association with the Tamil land which is at least 2,000 years old. The writers of the Sangam Age place them in rural settlements withdrawn from cities. Maravars are the courageous breed and were involved in the major wars that Tamilnadu witnessed. The Kingdom of Ramnad was a Maravar kingdom and was ruled by the Setupati kings[११]. Ramanathapuram and Sivagangai districts are Maravar strongholds from ancient times. Maravars are courageous breed and were involved in almost all the major battles and wars that ancient Tamilnadu witnessed. Maravars are found predominantly in the Southern districts of Tamilnadu viz., Madurai, Theni, Sivagangai, Ramanathapuram, Dindigul, Virudhunagar, Thirunelveli, Thoothukudi and Kanyakumari districts of Tamil Nadu. They ruled the vast land mass of Tamilnadu along with the coastal rulers,Paravars. Both these tribes seems to have common origin,tamil nagas. The Southern martial arts of Kalarippayattu, Silambam, Varma Kalai have been practiced primarily by Nairs, Kallars, Thevars and Villavars(Nadans & Ezhavars) of erstwhile Travancore areas. The Maravar have close relation with Kalabhars even though they Maravars are a non-aryan, non-Kalabhar group.Another aristocratic caste called Paravars are akin to Maravars. They were ancient rulers of Pandya kingdom of coastal land and inland from the First Sangam Tamil age. Their leaders were given the title "Meenavan" and "Pandyan" respectively. Edgar Thurston (1855-1935) a British museologist and ethnographer identified the use of the boomerang by Kallars and Maravars of South India. Large number of Maravars served in the armies of many princely states of Kerala. But during the 18th and 19th centuries, most of them were assimilated in to the Tamil Padam Nair subcaste of the Nair community. The Maravar regiment of the Travancore army was known as "Maravar Padai", which supplemented Nair Pattalam, the larger indigenous military unit.[१२] Tamil Padam Nair is recognized as a part of the Malayala Kshatriya social grouping. The Ramnad Zamindar's are accorded the title Sethupathi (protector of the Sethu bridge) even to this day. There are 2 major subdivisions among the Maravar community. One is Appa Nattu Kondyankottai Maravar and another one is Chembiya Nattu Maravar. The Kondyan Kottai Maravars are related to the Vellalars and are still maintaining Killai(branches) as their sub sects. The Killai is inherited from mother. So a boy or girl will not marry in their same Killai. It is assumed that they are brother & sister. Such a practice is no longer prevailing amongst other maravars. The married womens of kondyankottai maravers wear "Thali" (Thirumangalyam) in the shape of Shiva lingam. So it is called "Linga Thali". Most of the Tamil castes wear the same type of "Linga Thali". The Chembiya Nattu Maravars are Surya vamsam[ संदर्भ हवा ]. They are historically from Thanjavur. Kondayan kottai maravars women were having habits of maruthalli. But Chembiya Nattu Maravars women were having habit of Udankattai yeruthal (Sati which is now banned and hence not in practise). Agamudayar Agamudayar(साचा:Lang-ta) meaning Landlords . Agamudayars are famously known by their title ServaiThey make expert soldiers, warriors and constituted the bulk of Pandya armies. The legendary '''Maruthu Pandiyar''' brothers came from the Agamudayar (Servai) community. when 29 April 1789, the British forces attacked Kollangudi. It was defeated by a large body of Marudhu.It is said that the Marudhu brothers could kill a tiger without using any weapons. The lands the community owns are actually rewarded for their loyal and valuable service rendered for the cause of the Kings and the nation. Agamudaiyars are found all over in Southern Tamilnadu in Sivagangai, Virudhunagar, Ramanathapuram, Tirunelveli, Thoothukudi, Kanyakumari, Thanjavur, Thiruvarur, Pudukkottai, Madurai, Trichy, Ariyalur and Tiruvannamalai districts & Also in Karnataka state Hiriyur Taluk, Aranakatte & Maskal matti people are living. "[१३]. The word Agamudaiyan or Ahamudaiyan is derived from the root Aham which in Tamil means the guts or brave of one's mind.[१४] Agam also means "land" in Tamil[१५], signifying that Agamudaiyars are Landlords and Householder ; the suffix Udeiyar indicating ownership. The word is also used in another form, Ahampadiyar, derived from another meaning of the same root, i.e., inside. And, in this derivation, it signifies a meaning of a particular profession, whose office it was to attend to the business in the Interior's of the King's Palace or in the Pagoda".[१४] The name," Mr. J. H. Nelson writes, "is said by the Rev. G. U. Pope, in his edition of the Abbe Dubois' work to be derived from aham, a temple, and padi, a step, and to have been given to them in consequence of their serving about the steps of temples. But, independently of the fact that Madura pagodas are not approached by flights of steps, this seems to be a very far-fetched and improbable derivation of the word. Or, perhaps, the name comes from aham in the sense of earth, and pati, master or possessor."[१४][१६][१७] Agamudaiyar were employed by Srilankan kings as body guards & to protect palaces,according to Ceylon history, they were referred to as "Agampadi Soldiers"& it also gives the break down of the term "Agampadi",(Agampu+Adi-to hit in Tamil), The ordinary title of the Agamudaiyans is Servaikkaran, .[१७] In Pudukkottai, Trichy, Sivangagai, Virudhunagar, Ramanathapuram, Thanjavur, Thirunelveli, Thoothukudi, Kanyakumari districts Agamudaiyans are also called Terkittiyar ("Southerners").[१७]. The Agamudaiyans are divided into the following sub-sects: Aivali Nattan, Kottaipattu, Malainadu, Nattumangalam, Rajaboja, Rajakulam (Rajakulam and Parvatha Rajakulam), Rajavasal, Kalian, Sani, Maravan, and Servaikkaran.[१८]. Surnames and Titles The surnames used by the kallar people are Ambalakarar, Servai,Gopalar, Kalapadiyar, Vandaiyar,Mallikondar, Veeramundar, Paluvettaraiyar, Paandurar, Malayaman, Vallavaraiyar, Etrandaar, Mannaiyar, Nattar (not Nadar), kumarandar,Annuthipiriyar,Rajaliyar etc. It is a general practice in Tamil Nadu to address a kallar woman as "Nachchiyaar". Papudaiyar, Kadampurar, Anjathevar, Olivarayar, Vanathirayar, Sendapiriyar, OOnayaar, Alathondamar, Ambalam, Aarsuthiyar, Kaadavaraayar, Kalingarayar, Vandaiyaar, Veeramundar, Sepillaiyar, Vallundar, Thanjaraayar, Kandiyar, Pursaar, Vaanavaraayar, Mazhavaraayar, Payer, Kommatti, Mootar, Patti, Kannakkarar, Irungular, Singilaar, Ponnapoondar, Pullavaraayar, Servai, Karaimeendar, Vanavarayar, Vairayar, Ponpethiar, Gopalar, Thevar, Kandapillai, Vayaadiyar, Naadalvar, Nattaar, Vallambar, Alankara Priyar, mavaliyar, Munaiyatriyar, Keerudayar, Saaluvar, Manraayar, Madhavarayar, Mudaliyar, Onthiriyar, Servai, Serumadar, Sethurayar, Vambaliar, Thenkondaar, Mankondaar, Moovaraiyar,Senainattar etc. There are over 2500 surnames in use. Story of Mukkulathor There was a well known story about mukkulathor.once three men who were best friends walking in the forest. a tiger came roaring them.the man of kallar hide behind the stone('kal' in tamil).one who took the tree branch for fighting with it known as maravar(tree-maram in tamil).one who stand bravely and fight with the help of his hand is called agamudaiyar. Some of the surnames are seen in Tamil copper-plate inscriptions of Chola was also mentioned in Ponniyin Selvan (Tamil historical novel written by Kalki Krishnamurthy). Recent Scientific study There are diverse theories with regard to the origin of Mukkulathors. Dr. Pitchappan have found the ancient DNA marker M130 in the blood of Piramalai Kallar that links them to the very first modern humans who migrated out of Africa and travelling through the southern coastline of Asia that eventually reached Australia. Freedom Fighters British colonisation of India was strongly resisted in the South especially in Mukkulathor country. Puli Thevar from the eighteenth century is remembered as the first Indian king to have fought and defeated the British in India. His exploits have since become legendary. Resistance to British rule was also offered by Padal Vellaiya Tevan who fought the British along with Kattabomman. His son Desakaval Senbaga Tevan is also remembered for his exploits. Rani Velu Nachiar, Queen of Sivaganga, is another noted personality who fought with the British during early British Era. The Maruthu Pandiyar brothers are notable for their role in the Polygar Wars. They were eventually captured by the British and hanged in 1801.Golden Words for Servai People "Paayavum Theriyum Pathungavum Theriyum Bayapada Theriyathu", which loosely translated means, "We know how to pounce, how to stalk but we know not any fear". Valukku Veli Thevan, a very strong Kallar Ambalakkarar rulled Paganeri Nadu in present Ramanatapuram District, who opposed the British rule. Religion They are traditionally Hindus of Saiva Siddhanta maargam. Presently Significant numbers of thevars are following Christianity, still upholding thevar caste values and pride. Today they constitute a significant part of the Tamil community in India, Sri Lanka, and in other parts of the world. Feudal/Caste System Caste status of the Thevar community is martial class. The 1891 Census of India listed them as a part of the Martial Races and they claim Kshatriya status.[१९] Inscriptions An inscription, from 1655, records an accord between the Sthanathar, a Chetti merchant community, and the Nattar to contribute fifty Kalanju of gold to the Elunattu Mutt at Chidambaram.[२०] Current Status Although a great many of the members are still agriculturalists, many have also progressed up the social ladder as doctors, engineers, entrepreneurs, politicians and civil servants.Especially in entertainment field this community is still has the dominating position. This community people are spread allover in the media world like Cinema, television etc. They are well placed in Politics as well. A large number of people from the community are serving the nation as military men. A large number of people are serving the Tamil Nadu police department. See also Forward Castes Martial Race Puli Thevar Maruthu Pandiyar U. Muthuramalingam Thevar Kallar (caste) References http://books.google.com/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6#v=onepage&q=thevar%20descended&f=false http://books.google.com/books?id=65Aqrna4o5oC&pg=PA141&dq=Tamil%2Baristocratic%2Bthevar&cd=1#v=onepage&q=Tamil%2Baristocratic%2Bthevar&f=false http://books.google.com/books?id=YUXjA3RayhoC&pg=PA141&dq=thevar%2Bpandya&lr=&cd=23#v=onepage&q=&f=false http://books.google.com/books?id=w6zkx_Ck3FwC&pg=PA63&dq=thevar%2Bpandya&cd=8#v=onepage&q=&f=false http://books.google.com/books?id=CGdDAAAAYAAJ&q=thevar%2Bpandya&dq=thevar%2Bpandya&lr=&cd=21 http://books.google.com/books?id=0tX4wzIUY3QC&pg=PA33&dq=kallar+palai+tinai&lr=&cd=2#v=onepage&q=kallar%20palai%20tinai&f=false கள்ளர் சரித்திரம் - நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் |url=http://www.krishnagiri.tn.nic.in/profile.htm Thenpandi Singam by M. Karunanidhi http://books.google.com/books?id=BzgYmdwFby4C&pg=PA43&dq=maravar+pandya&lr=&cd=26#v=onepage&q=maravar%20pandya&f=false http://books.google.com/books?id=vWLRxJEU49EC&pg=PA714&dq=pandyas+maravar+tribe&lr=&cd=1#v=onepage&q=pandyas%20maravar%20tribe&f=false http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm " Castes and Tribes of Southern India Vol I, Pg 5 Castes and Tribes of Southern India Vol I, Pg 6 http://books.google.com/books?id=CBMvAAAAMAAJ&pg=RA1-PA43&dq=maravar+martial+race&lr=&cd=15#v=onepage&q=maravar%20martial%20race&f=false Castes and Tribes of Southern India Vol I, Pg 7 Castes and Tribes of Southern India Vol I, Pg 8 http://www.archive.org/stream/tamilstudiesores00srin/tamilstudiesores00srin_djvu.txt People Of India:Maharashtra by Kumar Suresh Singh,Anthropological Survey of India:http://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991 http://www.hindu.com/2004/06/28/stories/2004062803670600.htm Thurston, Edgar; K. Rangachari (1909). Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. On Tamil Militarism- The suppression of Tamil military castes Genetic structure of four socio-culturally diversified caste populations of southwest India List of prominent Mukkulathors हेसुद्धा पाहा: List of Mukkulathors बाह्य दुवे http://www.thevar.in http://www.thevarcommunity.com/ http://www.devaronline.com/ http://devarcaste.wetpaint.com http://kallar.weebly.com http://www.kallarsangam.com Vallambar Official Website http://thevarcommunitymumbai.com http://www.thevaryouth.com/ http://pasumpontrust.com/ http://WWW.MUTHURAMALINGATHEVAR.COM Matrimony site for mukkulathor Exclusive Matrimonial Site for Kallars, Maravars and Agamudayars. Devapattu Kallars

Thursday 17 March 2016

சங்ககாலம் முதல்  குல தொழில் போர்த்தொழில் கொண்ட தமிழ் மறக்குடி முக்குலத்தினர் !


சங்ககால கொலை தொழில் - பிற்கால போர்த்தொழில்!

மறம்-வீரம்மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை
சம்ஸ்கிருதம்:
மாறோ(MARO)-கொலை
மாறவா(MARAVA)-கொலைகாரன்,வீரன், அரசன்,ஆள்பவன் 
ஆங்கிலம்:
மற்டர்(MURDER)-கொலை
மற்டரர்(MURDERER)-கொலைகாரன்.
மார்ஸ்(MAARS)-ரோமானிய போர்தெய்வம்

இவ்வாறு தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மறம் என்றால் வீரம் மறவன் என்றால் மறத்தொழில் புரிபவனான வீரன் என்று தான் பொருள்.சங்க இலக்கியத்தில் மறவர்கள் பாலை நிலத்தையே சார்ந்தவர்கள் ஆவார்.இங்கு விவசாயத்திற்கோ அல்லது கால்நடை மேய்ப்பதற்க்கோ வழியில்லை. எனவே இம்மக்கள் ஆறலையும், வேற்று நாட்டுக்கு சென்று போரையும் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள்.இவர்கள் முழுநேர மறத்தொழிலான ஆநிரை கவர்தலையும் போரையும் ஆங்கிலேய அட்சி வரை செய்து வந்துள்ளனர்.கொற்றவை(ஐயை) என்ற மறவரின் முதன்மையான் போர்தெய்வம்,


இவர்கள் விவசாயமோ அல்லது வேறு தொழிலோ அறியாது மறத்தொழில் மட்டும் புரிந்து வந்த காரணத்தால் தான் இவர்களை மூவேந்தர்கள்(சேர,சோழ,பாண்டிய) மன்னர்களாக பரிணாமம் பட்டு ஏனைய தமிழ் குடிகளை ஆளும்  மூவேந்தர்களே தலைவர்களாய் மறவர் பெருமான்,மறவர் செம்மல் என்று பூண்ட சங்க பாடல்களின் ஆதாரமாய் நாம் காண்கின்றோம்.
https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false
======================================
ஆங்கிலேயர்கள் 1891ல் எடுத்த முதல் குலத்தொழில் வழி சாதி கணக்கெடுப்பில் தமிழ் சாதிகளில் முக்குலதினரை "MARTIAL RACE" - போற்குடிகள் என்று வகைபடுதினர்,
https://en.wikipedia.org/wiki/1891_census_of_India
https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false
======================================
சங்ககாலத்தில் கள்ளர்,மறவர்,அகமுடையார் "மறவர்" என்ற ஒரே குடிதான் மறவர்களின் ராஜகுல பட்டசொல்,
"தேவர்" இதை 13ம் நூற்றண்டில் பாண்டிய நாடிர்க்கு வந்த இத்தாலிய கடலோடி மார்கோபோலோ பாண்டிய மன்னன் சுந்திரபாண்டிய தேவரை சந்தித்து விட்டு எழுதிய குறிப்பு உறுதிபடுத்துகிறது -

https://books.google.ca/books?id=RH4VPgB__GQC&pg=PA76&lpg=PA76&dq=marco+polo+maravar+community&source=bl&ots=eBed62m1Uw&sig=dOgBXxLNz8W2_n-QHK8Y6E58j6Q&hl=en&sa=X&ved=0ahUKEwj9p-G84sjLAhXjmIMKHfFnA8IQ6AEIGzAA#v=onepage&q=marco%20polo%20maravar%20community&f=false
---------------------------------------------------------------
ராமாயணம் வழி முக்குலதினருக்கு வந்த சம்ஸ்கிரித பெயர்  "தேவர்" -
=============================================================
தேவர் சமஸ்கிரத சொல் அதன் பொருள் ஆள்பவன் அரசன்,போற்குடியை சேர்ந்தவன் என்று பொருள், ஆகையால் இந்தியாவில் வேறு பகுதிகளில் சில மன்னர்கள் தேவர் பட்டம் தாங்கியது உண்டு ஆனால் அது அவர்களில் குல வழி பெயராக இருந்தது இல்லை,
ராமாயணம் புராணம் வழி  ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் .

============================
ஐந்து தினைகளிலும் மிஞ்சிய தமிழ் தொல்குடிகள்:
--------------------------------------------------
ஐந்து தினை மக்கள்:

குறிஞ்சி:
குறவர் ,குறத்தியர்.

முல்லை:
இடையர்,இடைச்சியர்.

மருதம்:
உழவர்,உழுத்தியர்.

நெய்தல்:
பரதவர்,பரத்தியார்

பாலை:
மறவர்,மறத்தியார்,எயினர்,எயிற்றியர்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள இனமே சங்க காலம் முதல் வாழ்ந்து வந்த குடியினர் ஆவர்.இதில் குறவர்,பரதவர்,மறவர் தான் இன்று தமிழக ஜாதிய பட்டியலில் அச்சு அசலாக கானப்படுகின்றனர்.இன்று தமிழ கெஜட்ட்டிலும் இதே பெயரில் தான் கானப்படுகின்றனர்.மற்ற இனங்கள் இண்க்கலப்பாகி வழக்கொழிந்து விட்டனர்.இன்று 300க்கும் மேற்ப்பட்ட ஜாதியினரும் பல மொழிகளும் பேசப்பட்டாலும் இந்த நாண்கு ஜாதியினர் மட்டுமே சங்க காலத்துக்கும் முந்தி இன்று வரை வாழ்கின்றனர்.

"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்மறக்குடி"  என்று புறநானூற்றில் தமிழ்மறககுடியின் தொன்மை என்பதை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது, தற்போது மொத்த தமிழ் குடிகளாக பொதுமை படுத்துகிறார்கள்,

ஆண்ட வம்சம் தேவர் இனம் என்று பறை சாற்றி இன்றும் நிற்கும்  ஜமீன்கள்-
(திருநெல்வேலி)


----------------------------------------------
1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார் ( மறவர் குல வன்னியர் பட்டம்)
2. சேத்துர்-ராஜா ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- நெல்ல்லிலே முத்துவேய்ந்த சேதுராயர்
8. தென்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதாலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தாமனி பூலிதுரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்திர தலைவனர்(அ) ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனாட்டு மூவராய தேவர்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியாச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருநெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
----------------------------------------------------
மறவர் சமஸ்தானங்கள்
*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
---------------------------------

மறவர் ஜமீன்கள்(ராமநாதபுரம்)
------------------------------------------------
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டு தேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்
====================================

தேவர் என்றால் ஜாதி இல்லை சரித்திரம் !